திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.
புதுப்பாளையம் படிஅக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி தவமணி தனது நிலத்தை டிராக்டரில் உழுவதற்காக ஓட்டிச் சென்றார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.