கல்வித்துறையைக் கேலிக் கூத்தாக்கியதே முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியின் சாதனை என, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், சென்னை பல்கலைக் கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, மே மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பேராசிரியர்கள், போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், திமுக ஆட்சியில் வெற்று விளம்பரங்களுக்காக வீண் செலவுகள் செய்யப்படுவதாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தின் கடன் சுமை 9 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகிவிட்டதாக கூறியுள்ள அவர், இந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், உடனடியாக பல்கலைக் கழக பேராசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் மே மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.