பிரதமர் மோடி நாளை காஷ்மீருக்குப் பயணம் மேற்கொண்டு, அங்குக் கட்டப்பட்டுள்ள உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தைத் திறந்து வைக்கவுள்ளார்.
செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரமும், ஆயிரத்து 315 மீட்டர் நீளமும் கொண்ட இரும்பு ரயில் பாலம் ரயில்வே துறையால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
நில அதிர்வு மற்றும் பலத்த காற்று சூழலை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் பாலத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார்.
இந்நிலையில், இந்த பாலம் ஜம்மு – ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.