பாகிஸ்தானுடனான போரில் இந்தியா யாரையும் மத்தியஸ்தம் செய்யுமாறு கேட்கவில்லை எனக் காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரை, வர்த்தகத்தைக் காரணம் காட்டி நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
இதற்கிடையே பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்கக் காங்கிரஸ் எம்பி சசிதரூர் தலைமையிலான குழு அமெரிக்கா சென்றுள்ளது.
வாஷிங்டன்னில் நடந்த கலந்துரையாடலின்போது பேசிய சசிதரூர், தலையில் துப்பாக்கியை நீட்டி பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்ற தெளிவான நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தான் தனது மண்ணில் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால், இந்தியா மீண்டும் பதிலடி கொடுக்கும் என்றும் சசிதரூர் தெரிவித்தார்.