கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நேற்று மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரும், டெல்லி, குஜராத் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலா ஒருவரும் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் உருமாறிய கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.