தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மக்களைத் திசைதிருப்பி வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஆட்சியின் தோல்வியை மறைக்க முயல்கிறார் என்று குற்றம் சாட்டிய எல்.முருகன், நான்கரை ஆண்டுகளாக மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் இருந்து வருகிறார்கள் என அவர் தெரிவித்தார்.
திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது என்றும் ஆட்சியை முதலமைச்சர் தான் நடத்துகிறாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது என எல்.முருகன் கூறினார்.
ஆட்சியின் தோல்வியை மறைக்க மத்திய அரசைக் குறை சொல்வதை திமுக அரசு வாடிக்கையாக்கியுள்ளது என்று கூறியவர் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மக்களைத் திசை திருப்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என எல். முருகன் குற்றம் சாட்டினார்.
யாரும் பாதிக்காத வகையில் தொகுதி மறுசீரமைப்பு இருக்கும் என மத்திய அரசு தெளிவாகக் கூறியுள்ளது என்றும் முருக பக்தர்கள் மாநாட்டைத் தமிழகத்தில் நடத்துவதுதான் சரியாக இருக்கும் என எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.