குவாரி உரிமையாளர்கள் பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றனர் - நீதிபதி வேதனை
Nov 17, 2025, 12:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குவாரி உரிமையாளர்கள் பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றனர் – நீதிபதி வேதனை

Web Desk by Web Desk
Jun 7, 2025, 03:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் சட்டவிரோதமாகச் செயல்பட்ட சுரங்கத்துக்கு விதிக்கப்பட்ட 32 கோடி ரூபாய் அபராதத்தை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம், குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், புரவிபாளையத்தில் பட்டா நிலங்களில் நடத்தி வரும் குவாரிகளில் இருந்து சட்டவிரோதமாகக் கனிம வளங்கள் எடுத்ததாகக் கூறி, கடந்த 2022-ம் ஆண்டு செந்தாமரை என்பவருக்கு 32 கோடியே 29 லட்சத்து 77 ஆயிரத்து 792 ரூபாய் அபராதம் விதித்து உதவி ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தாமரை தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி, உரிமம் இல்லாமல் கற்கள், கிராவல் மண் உள்ளிட்டவைகளை எடுக்கும் குற்றத்திற்கு 5 ஆண்டுகள் சிறையும், 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க சட்டப்பிரிவுகள் உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

மேலும், சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் செந்தாமரைக்கு எதிராகப் புகார் அறிக்கையைத் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட கனிமவளங்களுக்கு இணையான அபராதத் தொகையை வசூலிப்பதில் எந்த சமரசமும் இல்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி, கோவை உதவி ஆட்சியரின் விதித்த அபராத தொகையை உறுதி செய்து மொத்த தொகையையும் செந்தாமரையிடம் இருந்து வசூலிக்க அரசுக்கு உத்தரவிட்டார்.

நேர்மையற்ற பேராசைக்காரர்களிடம் இருந்து பூமித்தாயை காப்பாற்றவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம்  கொண்டு வரப்பட்டதாகக் குறிப்பிட்ட நீதிபதி, குவாரி உரிமையாளர்கள், பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தைக் குடிப்பதாக வேதனை தெரிவித்தார்.

மேலும், குவாரி மோசடியில் கள அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை என்ன பங்கு உள்ளது? என்பது குறித்து விசாரணை நடத்தி, குற்றவியல்  நடவடிக்கை எடுக்கவேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு நீதிபதி பரத சக்ரவர்த்தி உத்தரவிட்டார்.

Tags: சென்னை உயர்நீதிமன்றம்கோவை மாவட்டம்Quarry owners are cutting the chest of Mother Earth and drinking her blood - Judge in anguishகுவாரி மோசடி
ShareTweetSendShare
Previous Post

மேற்கு வங்கம் : இனிப்புகளை வழங்கி பக்ரீத் வாழ்த்து பரிமாறிய எல்லை பாதுகாப்பு வீரர்கள்!

Next Post

நெல்லை : மத்திய சிறைச்சாலையில் போலீசார் அதிரடி சோதனை!

Related News

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவ தீர்த்தவாரி விழா கோலாகலம்!

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – மதுரையில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா!

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

கடற்படை தளத்தை தூசி தட்டிய அமெரிக்கா : கரீபியன் தீவில் அதிகரிக்கும் போர் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி – மோகன் பகவத்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies