குவாரி உரிமையாளர்கள் பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றனர் - நீதிபதி வேதனை
Mar 19, 2026, 04:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குவாரி உரிமையாளர்கள் பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றனர் – நீதிபதி வேதனை

Murugesan M by Murugesan M
Jun 7, 2025, 03:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் சட்டவிரோதமாகச் செயல்பட்ட சுரங்கத்துக்கு விதிக்கப்பட்ட 32 கோடி ரூபாய் அபராதத்தை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம், குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், புரவிபாளையத்தில் பட்டா நிலங்களில் நடத்தி வரும் குவாரிகளில் இருந்து சட்டவிரோதமாகக் கனிம வளங்கள் எடுத்ததாகக் கூறி, கடந்த 2022-ம் ஆண்டு செந்தாமரை என்பவருக்கு 32 கோடியே 29 லட்சத்து 77 ஆயிரத்து 792 ரூபாய் அபராதம் விதித்து உதவி ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தாமரை தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி, உரிமம் இல்லாமல் கற்கள், கிராவல் மண் உள்ளிட்டவைகளை எடுக்கும் குற்றத்திற்கு 5 ஆண்டுகள் சிறையும், 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க சட்டப்பிரிவுகள் உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

மேலும், சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் செந்தாமரைக்கு எதிராகப் புகார் அறிக்கையைத் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட கனிமவளங்களுக்கு இணையான அபராதத் தொகையை வசூலிப்பதில் எந்த சமரசமும் இல்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி, கோவை உதவி ஆட்சியரின் விதித்த அபராத தொகையை உறுதி செய்து மொத்த தொகையையும் செந்தாமரையிடம் இருந்து வசூலிக்க அரசுக்கு உத்தரவிட்டார்.

நேர்மையற்ற பேராசைக்காரர்களிடம் இருந்து பூமித்தாயை காப்பாற்றவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம்  கொண்டு வரப்பட்டதாகக் குறிப்பிட்ட நீதிபதி, குவாரி உரிமையாளர்கள், பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தைக் குடிப்பதாக வேதனை தெரிவித்தார்.

மேலும், குவாரி மோசடியில் கள அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை என்ன பங்கு உள்ளது? என்பது குறித்து விசாரணை நடத்தி, குற்றவியல்  நடவடிக்கை எடுக்கவேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு நீதிபதி பரத சக்ரவர்த்தி உத்தரவிட்டார்.

Tags: சென்னை உயர்நீதிமன்றம்கோவை மாவட்டம்Quarry owners are cutting the chest of Mother Earth and drinking her blood - Judge in anguishகுவாரி மோசடி
ShareTweetSendShare
Previous Post

மேற்கு வங்கம் : இனிப்புகளை வழங்கி பக்ரீத் வாழ்த்து பரிமாறிய எல்லை பாதுகாப்பு வீரர்கள்!

Next Post

நெல்லை : மத்திய சிறைச்சாலையில் போலீசார் அதிரடி சோதனை!

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies