உத்தரகாண்ட் மாநிலம் நைனிடலில் தூய்மை இயக்கம் மற்றும் மரக்கன்று நடும் திட்டத்தை முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தொடங்கி வைத்தார்.
தூய்மையான உத்தரகாண்ட் என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களை முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி சந்தித்துப் பேசினார்.
மேலும், உள்ளூர் மேம்பாடு மற்றும் சுகாதாரம் தொடர்பான ஆலோசனைகளை அவர் மேற்கொண்டார். முன்னதாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மைக்கான உறுதிமொழியை மாணவர்கள் எடுத்துக் கொண்டனர்.