சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை பாஜக மட்டுமின்றி கூட்டணிக் கட்சிகளுக்கும் பலம் சேர்க்கும் எனத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை பாஜக மட்டுமின்றி கூட்டணிக் கட்சிகளுக்கும் பலம் சேர்க்கும் என்றும் தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது என்று ஜி.கே.வாசன் குற்றம் சாட்டினார்.
ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்பதே தமாகாவின் நோக்கம் என்றும் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்ததற்கு அம்மாநில அரசு முறையாகத் திட்டமிடாததே காரணம் என்றும் 4 ஆண்டுக்கால திமுக ஆட்சியில் சாதனைகள் ஒன்றும் இல்லை என்றும் வேதனைகள் தான் உள்ளன என்று ஜி.கே.வாசன் கூறினார்.