கொடைக்கானல் குணா குகை பகுதியில் நுழைவு சீட்டு எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மலேசியச் சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் தாக்கிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சுற்றிப் பார்க்க மலேசியாவிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். தொடர்ந்து குணா குகை பகுதியில் நுழைவு சீட்டு வாங்கும் போது அவர்களுக்கும், வனத்துறையினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது வனத்துறையினர், மலேசியா சுற்றுலாப் பயணிகளைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.