ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
காலநிலை மாற்றம் மற்றும் மாசுபாடு காரணமாக ஆப்கானிஸ்தானில் நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தண்ணீரின்றி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.