இந்திய விமானப்படைக்கு 3 அதிநவீன உளவு விமானங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான விமானங்களை வாங்கும் I-STAR திட்டம் குறித்து அடுத்த வாரம் நடைபெறும் பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர்மட்ட கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட உள்ளது.
இந்த விமானங்கள் எதிரிகளின் ரேடார் நிலையங்கள், வான் பாதுகாப்பு மையங்கள் உள்ளிட்டவற்றைத் துல்லியமாகக் கண்டறிந்து தாக்கி அழிக்க உதவும் எனக் கூறப்படுகிறது.