குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் செல்போன் கடை உரிமையாளரைக் கும்பலொன்று தாக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய நிலையில், அதனைத் தர மறுத்ததற்காக செல்போன் கடை உரிமையாளரான கமலேஷ் சந்தானியை அக்கும்பல் தாக்கியுள்ளது.
இதில் படுகாயமடைந்த கமலேஷ் நண்பர்களால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.