சர்வதேச விண்வெளி மையத்திற்கு விண்வெளி வீரர்களை அழைத்துச் செல்லும் ஆக்சியம்-4 திட்டம், வானிலை காரணமாக நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் ஆக்சியம்-4 மனித விண்வெளி பயணம், இன்று திட்டமிடப்பட்டிருந்தது.
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு மற்றும் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகிய 4 பேர் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆக்சியம்-4 திட்டம் வானிலை காரணமாக நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நாளை மாலை 5.30 மணிக்கு விண்கலம் ஏவுப்படும் என்றும் இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.