நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த தம்பதியின் சடலங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடக்கு செல்லப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர் தொழிலில் நஷ்டத்தைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இவரும், இவரின் மனைவி வாசுகியும் வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.