பயங்கரவாதத்தை இருதரப்பு பிரச்சனையாக அல்ல, உலகளாவிய பிரச்சனையாகக் கருத வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
பெல்ஜியம் சென்று ஜெய்சங்கர், அங்குள்ள இந்தியர் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து எடுத்துரைத்தார்.
பயங்கரவாதத்தை இருதரப்பு பிரச்சனையாகப் பார்க்காமல் உலகளாவிய பிரச்சனையாகக் கருத வேண்டும் என்றும் ஜெய்சங்கர் கூறினார்.