ஆஸ்திரியாவில் பள்ளி ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர்.
வழக்கம் போல் பள்ளியில் மாணவர்கள் பாடம் பயின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்தவர் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 9 பேர் பலியாகினர். மீதமுள்ள மாணவர்களைப் பாதுகாப்புப் படையினர் மீட்டுச்சென்றனர்.