ராமேஸ்வரம் ராம நாதசுவாமி கோயிலில் பாரம்பரிய தரிசன வழி மூடப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ளூர் மக்கள் பயன்படுத்திவந்த பாரம்பரிய தரிசன வழியை முன்னறிவிப்பின்றி மூடியிருப்பது பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிரானது என தெரிவித்துள்ளார்.
பக்தர்களிடம் தரிசன கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்காகவே கோயிலில் உள்ள காசி விஸ்வநாதர் சன்னதி முன்பு கம்பி வேலிகள் போட்டு அடைத்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர்,
கோயிலுக்கு வரும் மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும், செலவை ஏற்படுத்தும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ள கட்டண வசூல் நடவடிக்கைகளை உடனடியாக இந்து சமய அறநிலையத்துறை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.