ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பின் நாடு திரும்பிய எம்.பி.க்கள் குழுவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது.
இதையடுத்து, ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பல்வேறு நாடுகளுக்கு சென்று விளக்கமளிக்க கனிமொழி, சசி தரூர் உட்பட 7 பேர் தலைமையில் எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டது.
குழுவை சேர்ந்தோர் பல்வேறு நாடுகளுக்கு சென்று ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து அந்நாட்டு தலைவர்களிடம் விளக்கினர். இந்த நிலையில், பயணத்தை முடித்த எம்.பி.க்கள் குழுவினர் டெல்லி திரும்பினர்.
அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த பிரதமர் மோடி, குழுவினருடன் கலந்துரையாடினார். பின்னர் அனைவருடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.