ஆமைவேகத்தில் தடுப்பணை : வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரால் விவசாயிகள் வேதனை!
Mar 15, 2026, 09:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆமைவேகத்தில் தடுப்பணை : வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரால் விவசாயிகள் வேதனை!

Murugesan M by Murugesan M
Jun 11, 2025, 08:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் விவசாயத்திற்கு பயனின்று வீணாகக் கடலில் கலப்பது டெல்டா பகுதி விவசாயிகள் மத்தியில் பெருத்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. வீணாகக் கடலில் கலக்கும் நீரை முறையாகச் சேமிக்கவும், ஆமை வேகத்தில் தடுப்பணை கட்டும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி நதிநீர் விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதிக்காத கர்நாடக அரசு, அம்மாநிலத்தில் பருவமழை கொட்டித் தீர்க்கும் கால கட்டங்களில் உபரிநீரைத் திறந்து விடுவதையும், தமிழகத்திற்குத் தேவைப்படும் நேரங்களில் உரிய நீரை வழங்க மறுப்பதையுமே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் பாயும் காவிரியை வெள்ள வடிகாலாக மட்டுமே பயன்படுத்தி வரும் கர்நாடகத்தின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், அவ்வாறு திறக்கப்படும் நீரும் வீணாகக் கடலில் கலப்பது விவசாயிகள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர் வீணாகக் கடலில் கலக்கும் நிலையில், அதனைத் தடுத்து நிறுத்தும் வகையில் தடுப்பணைகள் கட்டவோ, விவசாயத்திற்குப் பயன்படுத்தவோ எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காத திமுக அரசால் விவசாயிகள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக மயிலாடுதுறையில் 516 கோடி ரூபாய் மதிப்பிலான கதவணை மற்றும் தஞ்சை புகளூரில் 406 கோடி ரூபாய் மதிப்பிலான கதவணைக்கான கட்டுமானப் பணிகள் ஆமைவேகத்தில் நடைபெற்று வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

காவிரி – வைகை – குண்டாறு திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்ற அறிவிப்பு ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையில் தவறாமல் இடம்பெறுகிறதே தவிர அந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துளியளவும் தொடங்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் விவசாயத்திற்குப் பயனின்றி வீணாகக் கடலில் கலப்பது தொடர்கதையாகி வருவதாகவும் விவசாயிகள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்

ஏற்கனவே, மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பெரும் இழப்பைச் சந்தித்து வரும் நிலையில், உரிய நேரத்தில் கிடைக்க வேண்டிய நீரும் கிடைக்காத காரணத்தினால் பாசன நிலங்களின் பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது.

டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இனிவரும் காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரை முறையாகச் சேமித்து விவசாயத்திற்குப் பயன்படுத்துவதோடு, புதிய தடுப்பணைகளைக் கட்டும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என ஒட்டுமொத்த டெல்டா விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: விவசாயிகள் வேதனைTurtle-like check dam: Pain due to Cauvery water flowing into the sea in vainஆமைவேகத்தில் தடுப்பணை
ShareTweetSendShare
Previous Post

சுமார் 6,400 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

வீடுகளை ஒதுக்க லஞ்சம் : திமுகவினருக்கே ஒதுக்கப்படுவதாக கொந்தளிப்பு!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies