ஆபரேஷன் சிந்துார் தாக்குதலில் சேதமடைந்த விமானப்படை தளங்களை பாகிஸ்தான் அரசு தார்ப்பாய் போட்டு மூடி மறைத்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை ஆப்ரேஷன் சிந்துார் என்ற பெயரில் இந்திய ராணுவம் தகர்த்தது. இருநாடுகளுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு ஒரு மாதமான நிலையில், சேதமடைந்த விமானப்படை தளங்களை பாகிஸ்தான் ராணுவம் தார்ப்பாய்கள் போட்டு மூடியுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள சேதமடைந்த விமானப்படை தளங்களின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மேக்ஸார் என்ற தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முரித்கே விமானப்படை தளம் கடும் சேதமடைந்த நிலையில், தற்போது, அந்த தளத்தின் மீது பச்சை நிற தார்ப்பாய் போர்த்தப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.