ட்ரோன் தயாரிப்பில் வல்லரசாக உருவெடுக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதாக ராணுவ செயலர் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, நாட்டின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ராணுவத்துக்கு கூடுதலாக நிதி ஒதுக்கி வருகிறது. சுயசார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கி மத்திய அரசு செயல்படுவதால், உள்நாட்டு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆயுதங்களை ராணுவம் பயன்படுத்தி வரும் நிலையில், ட்ரோன் தயாரிப்பில் வல்லரசாக மாற இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதாக ராணுவ செயலர் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், கொள்முதல் மற்றும் கொள்கை நடவடிக்கைகள் காரணமாக இறக்குமதியை சார்ந்திருந்த காலம் தற்போது மாறி விட்டதாகவும் கூறியுள்ளார்.