பழனி தண்டாயுதபாணி கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.
பழனி முருகன் கோயிலுக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமி, மலையடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலம் மலைக் கோயிலுக்கு சென்றார். பின்னர், ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த தண்டாயுதபாணி சுவாமியை எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார்.
அப்போது,கோயில் நிர்வாகம் சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.