இமயமலையில் மட்டுமே வளரும் மருத்துவ காளான் - கோவையில் தயாரித்து சாதனை!
Jan 14, 2026, 04:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இமயமலையில் மட்டுமே வளரும் மருத்துவ காளான் – கோவையில் தயாரித்து சாதனை!

Murugesan M by Murugesan M
Jun 13, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமயமலையில் மட்டுமே வளரும் மருத்துவக் குணமிக்க கார்டிசெப்ஸ் காளான் வகைகளைக் கோவையில் தயாரித்து இரண்டு பேராசிரியர்கள் சாதனை படைத்துள்ளனர். மத்திய அரசின் நிதியுதவியோடு தயாரிக்கப்பட்ட மருத்துவ குணமிக்க காளான் வகைகள் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் உந்துசக்தியாக அமைந்துள்ளன.

காளான் என்பது இயற்கையாக மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சை தாவர வகையாகும். உலக அளவில் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வகையிலான காளான் வகைகள் காணப்படும் நிலையில் அதில் 2 ஆயிரம் வகை காளான்கள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தையும், மனித உடலுக்கு முழுமையான சத்துக்களையும் வழங்குவதோடு மருத்துவத்துறையில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அப்படிப்பட்ட மருத்துவக் குணம் நிறைந்த காளான்களில் ஒன்று தான் இந்த கார்டிசெப்ஸ் வகை காளான்.

இமயமலையின் உயரமான பகுதிகளில் உள்ள அந்துப்பூச்சி, கம்பளிப்பூச்சிகளில் மட்டுமே ஒட்டுண்ணியாக வளரும் இந்த கார்டிசெப்ஸ் காளான்களின் மருத்துவப் பயன்பாடு, அவற்றைச் சர்வதேச அளவில் பெரிய  அளவில் பிரபலப்படுத்தியுள்ளது.  அத்தகைய சிறப்புமிக்க காளான் வகைகளை தற்போது கோவையிலும் கிடைக்கும் வகையில் தனியார் கல்லூரியில் பணியாற்றும் இரண்டு பேராசிரியர்கள் இணைந்து இந்த கார்டிசெப்ஸ் காளான் உற்பத்தி மையத்தினை அமைத்துள்ளனர்.

மத்திய அரசின் மூலம் கிடைத்த நிதியுதவியைப் பயன்படுத்தி இம்மலைப்பகுதியில் கிடைக்கும் காளான்களின் மூலக்கூறுகளைச் செயற்கையாகத் தயாரித்து கார்டிசெப்ஸ் காளான் வகைகளை வளர்க்கும் முறை வர்த்தக ரீதியிலும் வெற்றி அடைந்துள்ளது.  பிரத்யேக குளிர் அறையை ஏற்படுத்தி அதில் செயற்கை முறையில் உருவாக்கப்படும் இவ்வகை காளான்கள் பவுடர் வடிவில் மாற்றப்பட்டு தேநீர் மற்றும் சூப்பில் கலந்து அருந்துவதற்கு ஏற்றவகையில் தயாரிக்கப்படுகின்றன. சோர்வு மற்றும் பலவீனத்தைப் போக்கி உடல் ஆற்றலை அதிகரிக்க உதவும் இந்த காளான் உற்பத்தி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சர்க்கரை அளவை சீராகப் பராமரிப்பதற்கும், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இதயத்தைப் பாதுகாப்பதற்கும் சிறந்த அருமருந்தாகத் திகழும் கார்டிசெப்ஸ் வகை காளான்கள், காசநோய், நரம்புக் கோளாறு, நீரழிவு நோய் உள்ளிட்டவைகளுக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் இந்த காளான் வளர்ப்பு முயற்சி கிராமப்புற பெண்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கும் எதிர்காலத்தில் சிறந்த தொழிலாக மாறும் சூழல் உருவாகியுள்ளது..

Tags: இமயமலையில் மட்டுமே வளரும் மருத்துவ காளான்மருத்துவ காளான்கோவைA medicinal mushroom that grows only in the Himalayas - a breakthrough made in Coimbatore
ShareTweetSendShare
Previous Post

மனைவியை கொல்ல சதி : துபாயில் இருந்து கூலிப்படை மூலம் தீர்த்துக்கட்ட முயற்சி!

Next Post

நாட்டை உலுக்கிய விமான விபத்து : இரட்டை எஞ்சின்கள் செயலிழப்பு காரணம்?

Related News

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies