மனைவியை கொல்ல சதி : துபாயில் இருந்து கூலிப்படை மூலம் தீர்த்துக்கட்ட முயற்சி!
Sep 12, 2026, 11:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மனைவியை கொல்ல சதி : துபாயில் இருந்து கூலிப்படை மூலம் தீர்த்துக்கட்ட முயற்சி!

Murugesan M by Murugesan M
Jun 13, 2025, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் இருக்கும் தனது மனைவியைத் துபாயில் இருந்தபடியே கூலிப்படையை ஏவி கணவன் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல நாட்களாகத் திட்டமிட்டு நண்பர்களையே கூலிப்படையாக ஏவி மனைவியைக் கொலை செய்யத் திட்டமிட்ட கணவர் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சென்னை சூளைமேடு பஜனை கோயில் தெருவில் வசித்து வரும் பெனாசீர் பேகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவர் உசேன் தனியாக துபாயில் வசித்து வருகிறார். இருவருக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பெனாசீர் பேகம் கடந்த இரண்டாம் தேதி சூளைமேட்டில் உள்ள அவரது வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்த போது அவரை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு அடையாளம் தெரியாத நபர்கள் தப்பியோடியுள்ளனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த பெனாசிர் பேகம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெனாசீர் அளித்த புகாரின் படி கொலை முயற்சி மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சூளைமேடு காவல்நிலைய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். தனிப்படைகள் அமைத்துத் தேடப்பட்ட நிலையில், பட்டுக்கோட்டையில் பதுங்கியிருந்த குற்றவாளிகளைக் கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மனைவியுடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து துபாயில் வசிக்கும் உசேனின் நண்பர்கள் தான் பெனாசீரை தாக்கியிருப்பது காவல்துறை நடத்திய விசாரணையில் உறுதியாகியுள்ளது. துபாயில் இருந்தபடியே தஞ்சாவூரைச் சேர்ந்த தனது நண்பர்களை வைத்து பெனாசீரை தாக்கக் கடந்த ஒரு மாதமாகத் திட்டமிட்டதாகவும், அதற்காகப் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தனது நண்பர்களுக்கே 30 ஆயிரம் பணம் கொடுத்து அவர்களைக் கூலிப்படையாகப் பயன்படுத்தி  பெனாசீர் பேகத்தின் மீது தாக்குதல் நடத்த உசேன் திட்டமிட்டதும் கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தின் மூலம் உறுதியாகியுள்ளது. தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவரை காவல்துறை தேடி வருகிறது.

பெனாசீர் பேகத்தின் தந்தை மீதும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இதே பாணியில் தாக்குதல் நடைபெற்றிருக்கும் நிலையில் அதற்கும் உசேனுக்கும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரே தன்னுடைய மனைவியைக் கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Plot to kill wife: Attempt to solve it using mercenaries from Dubaiமனைவியை கொல்ல சதிகூலிப்படை மூலம் தீர்த்துக்கட்ட முயற்சிசென்னை சூளைமேடு
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவை உலுக்கிய கோர விமான விபத்துகள்(1975-2025)!

Next Post

இமயமலையில் மட்டுமே வளரும் மருத்துவ காளான் – கோவையில் தயாரித்து சாதனை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies