ஆந்திர மாநிலம் திருப்பதியில் அதிகாலை நேரத்தில் மது அருந்த நபர்கள் போலீசாரின் ட்ரோன்களை கண்டு ஓடினர்.
திருப்பதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை நேரங்களில் ஆங்காங்கே அமர்ந்த படி மதுப்பிரியர்கள் மது அருந்தத் தொடங்கினர். இதனைக் கண்காணிக்கும் விதமாக திருப்பதி காவல்துறையினர் சைரன் ஒலியுடன் டிரோன்களை அனுப்பினர்.
வானில் பறந்த ட்ரோனை கண்டு அச்சமடைந்த மதுப்பிரியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனைப் பதிவு செய்த திருப்பதி காவல்துறையினர் வீடியோவை வெளியிட்டனர்.