சீனியர்கள் இல்லாத இந்திய அணியில், இளம் வீரர்கள் துணிச்சலாகச் செயல்பட வேண்டும், என அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அறிவுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. மூத்த வீரர்களான ரோகித் ஷர்மா, விராட் கோலி, அஷ்வின் ஆகியோர் ஓய்வு அறிவித்த நிலையில் இந்திய அணி இளம் வீரர்களுடன் களம் காண உள்ளது.
இந்நிலையில் போட்டியில் இளம் வீரர்கள் துணிச்சலாகச் செயல்பட வேண்டும், என கவுதம் கம்பீர் அறிவுறுத்தியுள்ளார்.