ஈரானின் அணுசக்தி திட்டத்தை முறியடிக்க பல ஆண்டுகள் திட்டமிட்டு ஆப்ரேஷன் ரைசிங் லயன் நடவடிக்கையை மேற்கொண்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்ரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், ஈரானின் அணுசக்தி திட்டத்தை முறியடிக்க பல ஆண்டுகளாக இஸ்ரேல் திட்டமிட்டதாகவும்,
200க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய விமானப்படை விமானங்கள் இதில் ஈடுபட்டதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
100 இலக்குகளை குறிவைத்து, 330 வெடிபொருட்கள் வீசப்பட்டதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் அதிகாரிகள், அணுசக்தி திட்டத்தை முறியடிக்க இவை அவசியமானவை என விளக்கம் அளித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா பல ஆண்டுகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதுபோல ஈரான் மீது இஸ்ரேல் திட்டமிட்டு துல்லிய தாக்குதல் நடத்தியிருப்பது இதன்மூலம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.