ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் வருகை தந்தனர்.
அதி கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, தேசிய பேரிடர் மீட்பு படையினர் 26 பேர் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 54 பேர் என மொத்தம் 80 பேர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர், இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு வால்பாறை, மேட்டுப்பாளையம் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.