செவி சாய்க்குமா அரசு? - சேலம் வந்த முதல்வருக்கு கோரிக்கை!
Jun 15, 2025, 12:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செவி சாய்க்குமா அரசு? – சேலம் வந்த முதல்வருக்கு கோரிக்கை!

Web Desk by Web Desk
Jun 14, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் அருகே அரசுப் பள்ளி மாணவர்கள் துயரத்தில் உள்ளனர். பள்ளியின் முன்பு குண்டும்  குழியுமாகக் காட்சியளிக்கும் சாலையாலும்  குப்பை கழிவுகளாலும் அவதிப்படுகின்றனர். அவர்களின் சுகாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

சேலம் உத்தம சோழபுரத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது.  1 முதல் 5 ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கான கட்டடம் தனியாகவும் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை மற்றொரு கட்டடமும் உள்ளன. அதாவது 5ஆம் வகுப்பு வரை உள்ள கட்டடம் வீரபாண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட உத்தம சோழபுரம் பஞ்சாயத்திலும்,  8ம்  வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளின் வகுப்பறை கட்டடம் பனைமரத்துப்பட்டி ஒன்றியம் நெய்க்காரப்பட்டி பஞ்சாயத்திலும்  செயல்படுகின்றன.

இரண்டுக்கும் 300 மீட்டர் இடைவெளியே உள்ளன. இந்த இரண்டு கட்டடங்களுக்கும் இடையே ஆறு மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட சாலை இன்னும் மூடப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளதுதான் மாணவ மாணவிகளை அவதிப்பட வைத்துள்ளது.

புதிய சாலை அமைக்கப்படும் எனக் கூறி தோண்டப்பட்ட பள்ளத்தால் மாணவ மாணவிகள் அவதிப்படும் நிலையில்  குப்பைகளின் தேக்கமும், கழிவு நீரும் மாணவ மாணவிகள் மட்டுமின்றி நோய் பரப்பும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளன மேலும் பள்ளியில் 135 மாணவ மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.  இவர்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை போதிய கதவுகள் இல்லாமல் திறந்தவெளி கழிப்பிடமாகக் காட்சியளிக்கிறது.

குப்பைகள் பள்ளி வளாகத்தை ஒட்டிய பகுதியிலும், அருகே உள்ள கரபுரநாதர் கோயில் மதில் சுவர் மீதும் கொட்டப்படுவதால் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் சேலத்தில் முகாமிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிலையில் மாணவ மாணவியர்களை மட்டும் மறந்தது ஏன் எனக் கேள்வி எழுந்துள்ளது.

மாவட்ட நிர்வாகத்துக்கும் தமிழக கல்வித்துறைக்கும் உத்தரவிட்டு சாலை , புதிய சுகாதார வசதிகளை முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையாக இருக்கிறது.

Tags: DMKMK StalinWill the government listen? - Request to the Chief Minister who came to Salemgovt school
ShareTweetSendShare
Previous Post

நவீன உபகரணங்களின் அணிவகுப்பு : மாற்றுத்திறனாளிகள் வியந்த கண்காட்சி!

Next Post

வனவிலங்குகளுக்கு பாதிப்பு : நெகிழியில்லா மருதமலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Related News

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

வனவிலங்குகளுக்கு பாதிப்பு : நெகிழியில்லா மருதமலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

நவீன உபகரணங்களின் அணிவகுப்பு : மாற்றுத்திறனாளிகள் வியந்த கண்காட்சி!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கைது : நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுகவின் பெயரை பொறித்து மக்களை ஏமாற்றுவது இனியும் நடக்காது : அண்ணாமலை திட்டவட்டம்!

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

செவி சாய்க்குமா அரசு? – சேலம் வந்த முதல்வருக்கு கோரிக்கை!

அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் 3 மாதங்களில் கண்டறியப்படும் : ராம் மோகன் நாயுடு

நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் பொய் பிரசாரங்களை உடைக்கும் தமிழக மாணவர்கள் : அண்ணாமலை பெருமிதம்!

குஜராத் : லாரி மறைத்து கடத்தி வந்த ரூ.89.32 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்!

பஹல்காமில் உயிர் நீத்த குதிரை சவாரி தொழிலாளியின் மனைவிக்கு அரசு வேலை!

முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடக்கும் : இந்து முன்னணி

கர்நாடகாவில் நாளை மறுநாள் முதல் பைக் டாக்சிகளுக்கு தடை!

சுபான்ஷு சுக்லா வரும் 19-ம் தேதி விண்வெளி மையம் பயணம்!

ஒடிசாவில் கள்ளத்தனமாக ஆயுதம் விற்பனை – 5 பேர் கைது!

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு : தமிழக மாணவர் சூர்ய நாராயணன் இந்திய அளவில் 27 ஆம் இடம் பிடித்து அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies