செவி சாய்க்குமா அரசு? - சேலம் வந்த முதல்வருக்கு கோரிக்கை!
Mar 15, 2026, 09:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செவி சாய்க்குமா அரசு? – சேலம் வந்த முதல்வருக்கு கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Jun 15, 2025, 06:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் அருகே அரசுப் பள்ளி மாணவர்கள் துயரத்தில் உள்ளனர். பள்ளியின் முன்பு குண்டும்  குழியுமாகக் காட்சியளிக்கும் சாலையாலும்  குப்பை கழிவுகளாலும் அவதிப்படுகின்றனர். அவர்களின் சுகாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

சேலம் உத்தம சோழபுரத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது.  1 முதல் 5 ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கான கட்டடம் தனியாகவும் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை மற்றொரு கட்டடமும் உள்ளன. அதாவது 5ஆம் வகுப்பு வரை உள்ள கட்டடம் வீரபாண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட உத்தம சோழபுரம் பஞ்சாயத்திலும்,  8ம்  வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளின் வகுப்பறை கட்டடம் பனைமரத்துப்பட்டி ஒன்றியம் நெய்க்காரப்பட்டி பஞ்சாயத்திலும்  செயல்படுகின்றன.

இரண்டுக்கும் 300 மீட்டர் இடைவெளியே உள்ளன. இந்த இரண்டு கட்டடங்களுக்கும் இடையே ஆறு மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட சாலை இன்னும் மூடப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளதுதான் மாணவ மாணவிகளை அவதிப்பட வைத்துள்ளது.

புதிய சாலை அமைக்கப்படும் எனக் கூறி தோண்டப்பட்ட பள்ளத்தால் மாணவ மாணவிகள் அவதிப்படும் நிலையில்  குப்பைகளின் தேக்கமும், கழிவு நீரும் மாணவ மாணவிகள் மட்டுமின்றி நோய் பரப்பும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளன மேலும் பள்ளியில் 135 மாணவ மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.  இவர்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை போதிய கதவுகள் இல்லாமல் திறந்தவெளி கழிப்பிடமாகக் காட்சியளிக்கிறது.

குப்பைகள் பள்ளி வளாகத்தை ஒட்டிய பகுதியிலும், அருகே உள்ள கரபுரநாதர் கோயில் மதில் சுவர் மீதும் கொட்டப்படுவதால் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் சேலத்தில் முகாமிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிலையில் மாணவ மாணவியர்களை மட்டும் மறந்தது ஏன் எனக் கேள்வி எழுந்துள்ளது.

மாவட்ட நிர்வாகத்துக்கும் தமிழக கல்வித்துறைக்கும் உத்தரவிட்டு சாலை , புதிய சுகாதார வசதிகளை முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையாக இருக்கிறது.

Tags: DMKMK StalinWill the government listen? - Request to the Chief Minister who came to Salemgovt school
ShareTweetSendShare
Previous Post

அரசுப் பள்ளி மாணவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தி வருகிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

வனவிலங்குகளுக்கு பாதிப்பு : நெகிழியில்லா மருதமலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies