டெல்டா பாசன வசதிக்காகத் தஞ்சையில் உள்ள கல்லணையிலிருந்து நாளை தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
டெல்டா மாவட்டங்களில் பாசன வசதிக்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கரூர், திருச்சி வழியாக நாளை தஞ்சாவூரில் உள்ள கல்லணை பகுதியை வந்தடைய உள்ளது.
அவ்வாறு கல்லணையை வந்தடையும் தண்ணீர் விவசாய பாசனத்திற்காக நாளை திறக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கல்லணையில் உள்ள கட்டுமானங்கள், சிலைகளுக்கு வர்ணம் பூசும் வேலை நடைபெறுகிறது.
தண்ணீர் திறக்கப்படும் நிகழ்வுக்கு முன்னதாக கல்லணை பூங்காவில் உள்ள ஆதி விநாயகர் கோயிலில் நாளை சிறப்புப் பூஜைகளும் நடைபெற உள்ளன.