கர்நாடக மாநிலம், உத்தர கன்னடம் மாவட்டத்தில் உள்ள கார்வார் பகுதியில் மேக வெடிப்பு காரணமாக ஒரே நாளில் கனமழை கொட்டி தீர்த்தது.
கார்வாரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கார்வார் – ஹப்புவாடா சாலையில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். டோபி காட் சாலையில் பெரிய பாறை உருண்டு விழுந்ததால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.