சூறையாடப்பட்ட காவல்நிலையத்தைப் பார்வையிடச் சென்ற தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார் கைதுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
மதுரை மாவட்டம் பேரையூர் சத்திரப்பட்டியில் சூறையாடப்பட்ட காவல்நிலையத்தைப் பார்வையிடச் சென்ற தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரான ஆர். பி. உதயகுமார் தமிழக காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
காவல் நிலையத்திற்குள் துணிச்சலாக நுழைந்து அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய குற்றவாளிகளைத் தடுக்கத் தவறிய காவல்துறை, அதைப் பார்வையிட செல்லும் அரசியல் தலைவர்களைக் கைது செய்வது என்பது அராஜகம் மட்டுமன்றி கடும் கண்டனத்திற்குரியது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.