திருவாரூர் மாவட்டம், விளமலில் போலீசாரின் தடையை மீறி பாஜகவினர் இருசக்கர வாகன பேரணி நடத்தினர்.
வரும் 22-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக, திருவாரூரில் பாஜக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காகத் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விளமல் பகுதிக்கு வருகை தந்தார். அவருக்கு மாவட்ட பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கும் விதமாக இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
அதன்படி விளமலில் தொடங்கி தெற்கு வீதி வரை நடைபெற்ற பாஜகவினரின் பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி வழங்க போலீசார் மறுத்திருந்தனர். ஆனால், தடையையும் மீறி பாஜகவினர் இருசக்கர வாகன பேரணியை நடத்தியுள்ளனர்.