அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் 3 மாதங்களில் கண்டறியப்படும் என, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்திற்குள்ளானதில் மருத்துவ மாணவர்கள், பயணிகள் என 270 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு விளக்கமளித்தார்.
அப்போது பேசிய அவர், விமான விபத்தின் முழுமையான காரணத்தைக் கண்டறிய மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் மற்றொரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், விமான பாதுகாப்பை மேம்படுத்த புதிய வழிமுறைகள் கொண்டு வரப்படும் எனவும் உறுதியளித்தார்.