தஞ்சாவூர் அருகே வடிகால் வாய்க்காலைத் தூர்வார வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் – நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், அம்மாபேட்டையில் இருந்து பல்லவராயன்பேட்டை வரை செல்லும் வடிகால் வாய்க்கால் புதர்மண்டி உள்ளது.
இதிலிருந்து பிரியும் வண்ணையகரம்பை வடிகால் வாய்க்காலும் தூர்வாராமல் இருப்பதால் மழைக் காலங்களில் விளைநிலங்கள் தண்ணீர் வடியாமல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், வடிகால் வாய்க்காலை உடனடியாக தூர்வாரக் கோரி வாய்க்காலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.