டெல்டா மாவட்ட சாகுபடிக்காக முதலமைச்சர் ஸ்டாலின் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த வியாழனன்று முதலமைச்சர் ஸ்டாலின் தண்ணீரைத் திறந்து நிலையில், கரூர், திருச்சி வழியாக அந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது.
இந்நிலையில், சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி சென்ற முதலமைச்சர் கல்லணையில் இருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து வைத்தார்.
இதனால் கல்லணையிலிருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதமும், வெண்ணாற்றில் வினாடிக்கு 1000 கன அடியும், கல்லணை கால்வாயில் வினாடிக்கு 500 கன அடியும் கொள்ளிடத்தில் வினாடிக்கு 200 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் மூலம் மொத்தம் 5 லட்சத்து 28 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.