பொருளாதாரத்தில் 3வது இடத்தை நோக்கி இந்தியா முன்னேறிச் செல்வதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சைப்ரஸ் நாட்டின் லிமாசோலில் தொழிலதிபர்கள் மாநாடு நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, சைப்ரஸ் அதிபர் கிறிஸ்டோ டவுலிட்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி, 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே அரசு தொடர்ந்து 3வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாகக் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளில் டிஜிட்டல் புரட்சி ஏற்பட்டுள்ளது எனவும் பொருளாதாரத்தில் 3வது இடத்தை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறிச் செல்கிறது எனவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.
இந்தாண்டு இறுதிக்குள் இந்தியாவிற்கும் கிரேக்கத்திற்கும் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள உறுதி பூண்டுள்ளதாகக் கூறிய பிரதமர் மோடி, இந்தியாவுக்கு வருகை தருமாறு சைப்ரஸ் அதிபருக்கு அழைப்பு விடுத்தார்.