மதுரையில் தன்மீது புகார் தெரிவித்த நபருக்கு அரசுப் பேருந்து ஓட்டுநர் கொலை மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோழவந்தான் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றாமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான சிசிடிவி காட்சியை ஜூஸ் கடை நடத்தி வரும் வணங்காமுடி என்பவர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநர், வணங்காமுடியின் கடைக்குச் சென்று அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.