மூன்று நாட்கள் பயணமாகக் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் புதுச்சேரிக்குச் சென்றுள்ளார்.
அவருக்குத் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். பல்வேறு நிகழ்வுகளில் குடியரசுத் துணைத் தலைவர் பங்கேற்கவுள்ள நிலையில் கடற்கரைச் சாலை, டூமாஸ் சாலை, உள்ளிட்ட முக்கிய சாலைகளில் 3 நாட்களுக்குப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.