மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதை திமுக கைவிட வேண்டும் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
சஹகார் பாரதி தமிழ்நாடு அமைப்பின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் நடைபெற்றது. இதில், மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே நிலவும் மோதலுக்குக் காரணம் திமுக தான் எனக் குற்றம்சாட்டினார்.
மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறும் புதிய மொழி மாற்றத்தை திமுக கொண்டு வந்துள்ளதாக விமர்சித்த அவர், இந்த போக்கைக் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.