கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட குமரன் நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்ற நிலையில், தற்போது 49 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைந்ததே மாணவர்களின் எண்ணிக்கை குறையக் காரணமெனக் குற்றஞ்சாட்டும் கிராம மக்கள், வட்டார கல்வி அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்.