இஸ்ரேலுடன் கைகோர்த்து அமெரிக்கா தாக்க முற்பட்டால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க முகாம்களை குறிவைத்து, ஏவுகணை தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் நிபந்தனையற்ற முறையில் சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. முன்னதாக ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இருப்பிடம் குறித்தும், அவரை கொல்ல இருக்கும் வாய்ப்புகள் குறித்தும் அதிபர் டிரம்ப் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க முகாம்களை தாக்க ஈரான் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே அமெரிக்க முகாம்களை பாதுகாக்கும் போர் விமானங்களுக்கு உதவும் வகையில் 36 எரிபொருள் நிரப்பும் விமானங்களை அமெரிக்கா ஐரோப்பாவிற்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.