ஈரானின் வான்வெளி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் கனனாஸ்கிஸ் நகரில் நடைபெற்று வரும் ஜி-7 உச்சி மாநாடில் பங்கேற்றிருந்த அதிபர் டிரம்ப் பாதியிலேயே வெளியேறினார்.
இது தொடர்பாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், அதிபர் டிரம்ப் இங்கிலாந்து பிரதமர் கியெர் ஸ்டார்மருடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால் ஜி-7 உச்சி மாநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு அதிபர் டிரம்ப் நாடு திரும்புவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக TRUTH SOCIAL சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் வெளியிட்ட பதிவில், தான் கையெழுத்திட கூறியிருந்த அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டாக வேண்டும் எனவும், ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார்,