பொருளாதாரம், வணிகம் ஆகியவற்றை கடந்து ஒரே பாரதம் உன்னத பாரதத்தை கடைபிடிக்க வேண்டும் என சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் 3.0 சிறப்பாக முடிந்ததை தொடர்ந்து, காசி தமிழ் சங்கமம் குறித்த கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கும் நிகழ்வு மற்றும் அதனை வெற்றிகரமாக செயல்படுத்தியவர்களை பாராட்டும் விழா நடைபெற்றது.
.இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஐ ஐ டி இயக்குநர் காமகோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் பேசிய ஐஐடி இயக்குநர் காமகோடி, அடுத்த முறையும் காசி தமிழ் சங்கமும் இன்னும் சிறப்பான முறையில் நடைபெற வேண்டும் என கூறினார்.
பொருளாதாரம், வணிகம் ஆகியவற்றை கடந்து ஒரே பாரதம் உன்னத பாரதத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.