ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் 2 வாரங்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவெடுப்பார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஈரான் இடையேயான தாக்குதல் 2வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளதால், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து இன்னும் 2 வாரத்தில் டிரம்ப் முடிவெடுப்பார் என கூறினார்.
மேலும், ஈரான் உடன் தொடர்ந்து கடித போக்குவரத்து நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், டிரம்ப் சுமூகமான தீர்வை எட்ட விரும்புவதாக தெரிவித்தார்.