அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த துணை விமானியின் இறுதிச்சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 12-ந் தேதி லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது நாட்டையே உலுக்கியது. இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்த துணை விமானியான கிளைவ் குந்தரின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள செவ்ரி கிறிஸ்தவ கல்லறையில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.