தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரட்டை இன்ஜின் அரசாங்கம் பீகாரில் வெற்றிகரமாகச் செயல்படுவதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் சிவான் மாவட்டத்தில் ரயில்வே, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான மேம்பாட்டுத் திட்டங்களை, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய நாட்டின் முன்னேற்றத்தைக் கண்டு பிற நாட்டின் தலைவர்கள் ஈர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஆர்.ஜே.டி., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஊழலை வளர்க்கும் கட்சிகளாக உள்ளதாகக் குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரட்டை இன்ஜின் அரசாங்கம் பீகாரில் வெற்றிகரமாகச் செயல்படுவதாகத் தெரிவித்தார்.