உலக யோகா தினத்தை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 51 முறை தண்டால் எடுத்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
உலக யோகா தினத்தை ஒட்டி நாடு முழுவதும் உள்ள மக்கள் யோகாசனம் பயிற்சி மேற்கொண்ட நிலையில் மதுரையில் உள்ள வேலம்மாள் கல்வி நிறுவனத்தில் யோகா மேற்கொள்ளும் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 10 ஆயிரம் மாணவர்களுக்கு யோகா பயிற்சியை கற்றுக் கொடுத்தார்.
தெளிவான முறையிலும், நிதானமான முறையிலும் யோகாவைச் செய்து அசத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரே மூச்சில் 51 முறை தண்டால் எடுத்து அசத்தினார்.
இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் வியப்பில் ஆழ்ந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி இளமையுடனும், புத்துணர்வுடனும் இருப்பதற்கு அவரது யோகா பயிற்சியே காரணம் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகி உள்ளன.