நரிக்குறவ மக்கள் வனப்பகுதிக்கு இடமாற்றம் : தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பு!
Mar 19, 2026, 02:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நரிக்குறவ மக்கள் வனப்பகுதிக்கு இடமாற்றம் : தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பு!

Murugesan M by Murugesan M
Jun 23, 2025, 06:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கல்பட்டு அருகே 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் நரிக்குறவ சமூக மக்களை வனப்பகுதிக்கு இடமாற்றம் செய்யும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வசிக்கும் மக்களை வனப்பகுதிக்கு மாற்றும் தமிழக அரசின்  முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், சோத்துப்பாக்கம், அச்சரப்பாக்கம், செய்யூர், சித்தாமூர் ஆகிய பகுதிகளில் சாலையோரங்களிலும், பேருந்து நிலையங்களிலும் வசித்து வந்த நரிக்குறவ சமூக மக்கள் அனைவரும் அரசின் உத்தரவின் படி இரும்புலி ஊராட்சியின் சிறுகிரணை பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பாக குடியமர்த்தப்பட்டனர்.

குடிநீர், சாலை, மின்சாரம் என எந்தவித அடிப்படை வசதிகளுமே இல்லாமல் வசித்து வரும் நரிக்குறவ சமூக மக்களை தற்போது வனப்பகுதிக்கு அருகே குடியமர்த்த முயற்சிகள் நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் வசித்துவரும் நரிகுறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினரைப் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய பின்பும், அவர்களுக்கான எந்தவித பலனும் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், மதுராந்தகம் அருகே வனப்பகுதியில் இலவச வீடு கட்டித்தருவதாகக் கூறி  20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் நரிக்குறவ மக்களை சிறுகரனை பகுதியில் இருந்து வெளியேற்ற முயல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பல ஆண்டுகளாகப் போராடி குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அடையாளங்களைப் பெற்றிருக்கும் நரிக்குறவ சமூக மக்களை வனப்பகுதிக்கு இடமாற்றம் செய்வதன் மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் பறிபோவதோடு, வனத்துறையின் தொந்தரவும் அதிகமாக இருக்கும் என்பதால் இடமாற்ற முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

வாழ்க்கையையே போராட்டமாகக் கொண்டிருக்கும் நரிக்குறவ சமூக மக்களைப் பழங்குடியின சமூகத்தில் இணைத்து மத்திய அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவு ஆறுதல் அளித்திருக்கும் நிலையில், அதன் மூலம் கிடைக்க வேண்டிய சலுகைகளைப் பெற முடியாத வகையில் இடமாற்றம் செய்யும் முயற்சியைத் தமிழக அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: நரிக்குறவ மக்கள்வனப்பகுதிRelocation of people from Narikurava to forest area: Strong opposition to the Tamil Nadu governmentதமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பு
ShareTweetSendShare
Previous Post

கட்டிய ஒன்றரை ஆண்டுகளில் இடிந்து விழும் குடியிருப்புகள் – பரிதவிக்கும் மக்கள்!

Next Post

ஜெகன்மோகன் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies