நரிக்குறவ மக்கள் வனப்பகுதிக்கு இடமாற்றம் : தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பு!
Jun 22, 2025, 03:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நரிக்குறவ மக்கள் வனப்பகுதிக்கு இடமாற்றம் : தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பு!

Web Desk by Web Desk
Jun 22, 2025, 12:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கல்பட்டு அருகே 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் நரிக்குறவ சமூக மக்களை வனப்பகுதிக்கு இடமாற்றம் செய்யும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வசிக்கும் மக்களை வனப்பகுதிக்கு மாற்றும் தமிழக அரசின்  முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், சோத்துப்பாக்கம், அச்சரப்பாக்கம், செய்யூர், சித்தாமூர் ஆகிய பகுதிகளில் சாலையோரங்களிலும், பேருந்து நிலையங்களிலும் வசித்து வந்த நரிக்குறவ சமூக மக்கள் அனைவரும் அரசின் உத்தரவின் படி இரும்புலி ஊராட்சியின் சிறுகிரணை பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பாக குடியமர்த்தப்பட்டனர்.

குடிநீர், சாலை, மின்சாரம் என எந்தவித அடிப்படை வசதிகளுமே இல்லாமல் வசித்து வரும் நரிக்குறவ சமூக மக்களை தற்போது வனப்பகுதிக்கு அருகே குடியமர்த்த முயற்சிகள் நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் வசித்துவரும் நரிகுறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினரைப் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய பின்பும், அவர்களுக்கான எந்தவித பலனும் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், மதுராந்தகம் அருகே வனப்பகுதியில் இலவச வீடு கட்டித்தருவதாகக் கூறி  20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் நரிக்குறவ மக்களை சிறுகரனை பகுதியில் இருந்து வெளியேற்ற முயல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பல ஆண்டுகளாகப் போராடி குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அடையாளங்களைப் பெற்றிருக்கும் நரிக்குறவ சமூக மக்களை வனப்பகுதிக்கு இடமாற்றம் செய்வதன் மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் பறிபோவதோடு, வனத்துறையின் தொந்தரவும் அதிகமாக இருக்கும் என்பதால் இடமாற்ற முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

வாழ்க்கையையே போராட்டமாகக் கொண்டிருக்கும் நரிக்குறவ சமூக மக்களைப் பழங்குடியின சமூகத்தில் இணைத்து மத்திய அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவு ஆறுதல் அளித்திருக்கும் நிலையில், அதன் மூலம் கிடைக்க வேண்டிய சலுகைகளைப் பெற முடியாத வகையில் இடமாற்றம் செய்யும் முயற்சியைத் தமிழக அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: வனப்பகுதிRelocation of people from Narikurava to forest area: Strong opposition to the Tamil Nadu governmentதமிழக அரசுக்கு கடும் எதிர்ப்புநரிக்குறவ மக்கள்
ShareTweetSendShare
Previous Post

கட்டிய ஒன்றரை ஆண்டுகளில் இடிந்து விழும் குடியிருப்புகள் – பரிதவிக்கும் மக்கள்!

Next Post

அடையாளத்தை இழக்கும் அண்ணா பல்கலைக்கழகம்!

Related News

சேலம் : குற்றங்கள் குறைய காவல் நிலையத்தில் திருநங்கைகள் பூஜை – விசாரணைக்கு உத்தரவு!

பெரம்பலூர் : காதல் கணவர் கொலை – மனைவி சாலை மறியல் போராட்டம்!

ஈரான் மீது பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய இஸ்ரேல்!

உசிலம்பட்டி அருகே புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்!

ஈரான் மீதான தாக்குதல் : அமெரிக்காவின் மினசோட்டா மாகாண உறுப்பினர் இல்ஹான் உமர் கண்டனம்!

ஈரானின் 3 அணு உலைகள் மீது அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரோடு : பானிபூரி விற்பனை தொடர்பாக தகராறு – ஒருவர் படுகாயம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

பெரியபாளையத்தில் வேலுடன் ஊர்வலமாகச் சென்ற பாஜகவினரை தடுத்து நிறுத்திய போலீசார்!

பெரம்பலூர் : தேரோட்டம் தொடர்பாக பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் தெருவில் ஆய்வு!

முருக பக்தர்கள் மாநாட்டுக்குச் செல்வோர் வேறு கோவிலுக்கு செல்லக்கூடாது : பாஜகவினரை தடுத்து நிறுத்திய காவல்துறை!

தஞ்சை : ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணை – விவசாயிகள் அவதி!

வைகை அணையின் கரை ஓரங்களில் மது பாட்டில்கள்!

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பது மகிழ்ச்சி : மோகன் ஜி

முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் வீட்டில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும் : எல்.முருகன் 

கொள்ளையடிக்க சென்ற போது செல்போனை விட்டு சென்ற திருடன் – போலீஸ் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies